தாய்ப்பால் புரைக்கேறியதால் சிசுவுக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka
By Sumithiran
தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு
தாய்ப்பால் புரைக்கேறி ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக ஹொரவ் பொத்தானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
77 ஹொரவ்பொத்தான கனுவ, மொரகேவவில் வசித்து வந்த பத்திரன புஷ்பகுமார என்பவரின் நிபுல சஞ்சனா என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மருத்துவமனை விரைவு
குழந்தை தாயின் பாலை அருந்திக் கொண்டிருந்த போது தாயின் பால் புரைக்கேறி கொண்டதாகவும், அந்த நேரத்தில் குழந்தையை ஹொரவ்பொத்தான மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்..
மரண அறிவித்தல்