இலங்கையை சூழ்ந்த மோசமான வானிலை
03.09PM UPDATE
நீர்ப்பாசனத் திணைக்களம், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களனி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ள நிலைமை உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
03.00PM UPDATE
கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்வாயில்களை படிப்படியாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை, தெரிவித்துள்ளது.
வினாடிக்கு சுமார் 250 கனஅடி நீர் கொத்மலை ஓயா ஆற்றில் வெளியேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
02.47PM UPDATE
நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பாடசாலைகளும் நாளை (04) மூடல்.
02.30PM UPDATE
அடுத்த சில மணி நேரங்களில் கலு கங்கையை அண்டிய பகுதிகளில் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
02.10PM UPDATE
நிலவும் மோசமான வானிலை காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (செவ்வாய்க்கிழமை) மூடப்படும் என நுவரெலியா கல்விப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
02.04PM - UPDATE
அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து, ஆக்ரா ஓயாவில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக எச்சரிக்கை .
01.53PM - UPDATE
மகாவலி ஆற்றங்கரைப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.
கடந்த சில மணிநேரங்களாக மகாவலி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்புகள், மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட அபாயம் உள்ளது என்று அது தெரிவித்தது.
01.47PM - UPDATE
மத்திய மலையகப் பகுதிகளில் பெய்து வரும் அதிதீவிர மழை காரணமாக, நாவலப்பிட்டிய – சோலங்கந்தை (Solangakanda) பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
01.47PM - UPDATE
நிலச்சரிவு காரணமாக கண்டி – கடுகண்ணாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
01.47PM - UPDATE
மலையகப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
12.47PM - UPDATE
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு மேல் கொத்மலை நீர்ப்பிடிப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் அதிதீவிர மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்3 வான் கதவுகள் இன்று (03) அதிகாலை தானாகத் திறக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |