ஈரானின் அடுத்த இலக்குகள்: அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
பஹ்ரைன் தலைநகரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வெளியேறுமாறு மனாமாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.
ஈரானிய தாக்குதல்களின் போது கிரவுன் பிளாசா தாக்கப்பட்ட பின்னர், பஹ்ரைன் தலைநகரில் உள்ள ஹோட்டல்கள் சாத்தியமான இலக்குகளாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளப் பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க குடிமக்கள்
குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம், இன்று மனாமாவில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டல் தாக்கப்பட்டு (நபர்கள்) காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகளைக் கண்காணித்து வருகிறது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு ஹோட்டல்கள் வருங்காலத் தாக்குதல்களுக்கு இலக்காக இருக்கலாம் என்றும், அமெரிக்க குடிமக்கள் மனாமாவில் உள்ள ஹோட்டல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
Security Alert: Update 5 – U.S. Embassy Manama, Bahrain – U.S. government personnel moved from hotels (March 1, 2026)
— U.S. Embassy Manama (@USEmbassyManama) March 1, 2026
The U.S. Embassy in Bahrain is tracking confirmed reports the Crowne Plaza Hotel in Manama was struck on March 1, 2026, resulting in injuries. We advise U.S.… pic.twitter.com/Ehok919Mg7
நீங்கள் பலத்த வெடிச்சத்தம் கேட்டாலோ அல்லது சைரன்கள் ஒலித்தாலோ, உடனடியாக ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுங்கள்.
ஒரு வீடு அல்லது கட்டிடத்தில் இருந்தால், மிகக் குறைந்த வெளிப்புறச் சுவர்கள், ஜன்னல்கள் மற்றும் திறப்புகளைக் கொண்ட கட்டமைப்பின் மிகக் குறைந்த நிலைக்குச் (தரைத்தளம்) செல்லுங்கள்.
எல்லா கதவுகளையும் மூடிவிட்டு, எந்த ஜன்னல்கள் அல்லது திறப்புகளிலிருந்தும் விலகி, உட்புறச் சுவருக்கு அருகில் அமர்ந்து பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |