கமேனியை பின்தொடர்ந்த மரணம்! வெளிவந்தது இஸ்ரேலின் துல்லிய தாக்குதல் பின்னணி
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மீது மேற்கொள்ளப்பட்ட கூட்டு தாக்குதலின் பின்னணி தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (CIA), கடந்த சில மாதங்களாக கமேனியின் நகர்வுகள் மற்றும் இருப்பிடங்களை கண்காணித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அவர் தனது முக்கிய ஆலோசகர்களுடன் தெஹரானில் உள்ள பாதுகாப்பு வளாகத்தில் கூடவிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், இஸ்ரேல்–அமெரிக்க கூட்டு வான் மற்றும் கடற்படை நடவடிக்கை தொடங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
போர் விமான தாக்குதல்
முதலில் சனிக்கிழமை மாலை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அது சனிக்கிழமை காலை நடைபெறுவதாக இஸ்ரேல் புலனாய்வு அமைப்பு கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி தாக்குதல் நேரம் முன்னோக்கி மாற்றப்பட்டதாகவும் முக்கியமாக, கமேனி அங்கு இருப்பார் என CIA உறுதிப்படுத்தியிருந்ததாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில், நேற்றையதினம்(28) சனிக்கிழமை இஸ்ரேல் நேரப்படி காலை சுமார் 6 மணியளவில் நீண்ட தூர துல்லிய ஆயுதங்களுடன் போர் விமானங்கள் புறப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து, சுமார் இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் கழித்து, தெஹரான் நேரப்படி காலை 9.40 மணியளவில் நீண்ட தூர ஏவுகணைகள் இலக்கைத் தாக்கியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Tactical Surprise
தெஹரானில் பல இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றில் ஒன்றில் ஈரானின் அரசியல் பாதுகாப்பு வட்டாரத்தின் மூத்த அதிகாரிகள் கூடி வந்திருந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போர் முன்னெச்சரிக்கையில் இருந்தபோதும், “தந்திர ஆச்சரியம்” (Tactical Surprise) ஏற்படுத்த முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கமேனியின் உயர் பாதுகாப்பு வளாகம் தாக்குதலின் ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டதாகவும், செயற்கைக்கோள் படங்கள் இதை உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் பரவலான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |