ஈரான் இதுவரை கண்டிராத தாக்குதல்! ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கையால் அதிகரிக்கும் பதற்றம்
ஈரான் இதுவரை இல்லாத அளவுக்கு தாக்கப்போவதாாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய எச்சரிக்கையை அவர், தனது உத்தியோகபூர்வ ட்ரூத் சோஷியல் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
இதுவரை கண்டிராத பலம்
அதில் “அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது, ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்தால், இதற்கு முன்பு கண்டிராத ஒரு பலத்தை கொண்டு அவர்களைத் தாக்குவோம்!” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் புதிய அலை தாக்குதல்களைத் தொடங்கி, உச்ச தலைவரின் மரணத்திற்குப் பிறகு நாட்டின் வரலாற்றில் "கடுமையான தாக்குதலை நடத்தப்போவதாக அச்சுறுத்திய நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் சமீபத்திய கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் பல நாட்கள் தொடரக்கூடும் என்று ட்ரம்ப கூறியுள்ளார்.
ஈரானின் பதிலடி
இவ்வாறானதொரு பின்னிணியில், "அமெரிக்கர்கள் ஈரானிய மக்களின் இதயத்தில் குத்தியுள்ளனர், நாங்கள் அவர்களின் இதயத்தில் குத்துவோம்" என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி அறிவித்துள்ளார்.

அத்தோடு, தங்கள் ஆயுதப்படைகளின் பதிலடி மிகவும் வலுவாக இருக்கும் என்றும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக மேலும் பழிவாங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
தாக்கி விட்டு ஒழிந்து ஓட முடியாது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என அலி லாரிஜானி மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |