படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்
உச்ச தலைவர் அலி கமேனியின் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதிலும் ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, மத்திய கிழக்கு நாடுகளின் தலைநகரங்களிலும் முக்கிய நகரங்களிலும் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
எச்சரிக்கை சைரன்
இஸ்ரேல் அமெரிக்க தளங்களையும் இலக்காகக் கொண்டு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் ஆறாவது அலையை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
🚨Sirens sounding across central Israel🚨 pic.twitter.com/ZdsfMEBfez
— Israel Defense Forces (@IDF) March 1, 2026
இந்த நிலையில், தெற்கு இஸ்ரேல் பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததையடுத்து ஈரானில் இருந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் கண்டறிந்ததாக கூறியுள்ளது.
இதேவேளை, துபாயில் காலை சுமார் 8.15 மணியளவில் மூன்று பெரிய வெடிப்பு சத்தங்களை கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, கத்தாரின் தோஹா நகரிலும் காலை 7.30 மணியளவில் பல வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளில் பாதிப்பு
பஹ்ரைன் உள்துறை அமைச்சு, தங்கள் நாட்டில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாக அறிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் அமைதியாக இருந்து அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஈராக்கின் எர்பில் விமான நிலையப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன, அங்கு கரும்புகை எழுந்ததாகவும், நகரில் கடுமையான வெடிப்புகள் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |