மட்டக்களப்பிற்கு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட தேர்தல் மத்தியஸ்தானமான இந்து கல்லூரியில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டுள்ன.
இந்த நடவடிக்கையினை இன்று திங்கட்கிழமை (05) காலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் மற்றும் அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
மாவட்டத்தில் 2 நகரசபை 1 மாநகரசபை 9 பிரதேச சபை உட்பட 12 உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள 144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் போனஸ் ஆசனம் உட்பட மொத்தமாக 274 பேர் தெரிவுக்கான தேர்தலில் 11 அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் உட்பட 101 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளது.
பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு
இதேவேளை 4 லட்சத்து 55 ஆயிரத்து 520 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 444 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இந்த தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு தேர்தல் மத்தியஸ்தானமான இந்து கல்லூரியில் இருந்து வாக்களிப்பு நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் நகர் மற்றும் முக்கிய சந்திகளில் பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
இதுவரை 353 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இதில் 90 வீதமான முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம்
இதேவேளை அம்பாறை மாவட்ட தேர்தல் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று ஆரம்பமானது.
அம்பாறை மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 478,000 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் 458 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் 202 இடங்களில் வாக்கு எண்ணும் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
