நூதன முறையில் ரூ. 600 மில்லியன் கொள்ளை: சிஐடிக்கு நீதிமன்றின் உத்தரவு!
இலங்கையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் போலவே உருவாக்கப்பட்ட பல போலி வலைத்தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் ரூ. 600 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி, சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதிபதி அசங்க போதரகம குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கைது செய்ய விசாரணை
இலங்கையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் போன்ற பிற வலைத்தளங்களை அமைத்து தனிநபர்களை ஏமாற்றுவதன் மூலம் இந்த பெரிய அளவிலான பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட சைபர் குற்றவாளிகள் குழு ஒன்று சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் வலைத்தளத்தைப் போன்ற வலைத்தளங்களை அமைத்து, வங்கியின் வாடிக்கையாளர்களிடம் இவ்வளவு கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த தலைமை நீதவான், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும், நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பிக்கவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
