சட்டத்தரணி சுட்டுபடுகொலை: வழக்கறிஞர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு
இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தலைவர் ராஜீவ் அமரசூரிய, தெரிவித்துள்ளார்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (15) நடைபெற்ற அதன் பொதுக் கூட்டத்தில் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதில் சுமார் 3500 வழக்கறிஞர்கள் பங்கேற்றதாகவும், சிலர் ஜூம் தொழில்நுட்பம் மூலம் தொடர்புடைய கூட்டத்தில் இணைந்ததாகவும் அவர் கூறினார்.
வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொலை
அந்தக் கூட்டத்தில், அக்குரேகொட பகுதியில் ஒரு வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீண்ட விவாதம் நடந்ததாக ராஜீவ் அமரசூரிய கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பல தனித்துவமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, நமது நாட்டில் தற்போது நிலவும் கொலைக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் ஒரு திட்டத்தை முன்மொழிய முடிவு செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக சட்ட நடவடிக்கை
இந்தக் கொடூரமான குற்றத்திற்குப் பொறுப்பான அனைவரையும் உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் பொதுப் பாதுகாப்பு நிறுவனங்களை தாம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதற்கோ அல்லது அதை உண்மையாகக் காண்பிப்பதற்கோ காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை தாம் கடுமையாகக் கண்டிப்பதாகத் தலைவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 மணி நேரம் முன்