பட்டலந்த படுகொலை: ரணிலின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய அல்ஜசீரா
முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அல் ஜசீரா நடத்திய நேர்காணலில் குழு உறுப்பினராக இருந்த முன்னாள் பிபிசி இலங்கை நிருபர் பிரான்சிஸ் ஹாரிசன்(Frances Harrison), பட்டலந்த கமிஷன் அறிக்கையை வெளியிட்டபோது அதை ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) முற்றாக மறுத்தார்.
நேர்காணலின் போது, படட்டலந்த வளாகத்தில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் கொலைகள் குறித்து தனக்குத் தெரியும் என்று அரசாங்க ஆணையம் கூறிய குற்றச்சாட்டுகளை ரணில் விக்ரமசிங்க நிராகரித்தார்.
குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் மறுக்கிறேன்
"அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் மறுக்கிறேன்,"இந்த சம்பவங்களின் "முக்கிய சிற்பி" என்று தன்னைக் குறிப்பிட்ட அரசாங்க விசாரணையை எதிர்கொண்டபோது அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை
ஆரம்பத்தில், அல் ஜசீரா அறிக்கையின் நகலை ரணில் விக்ரமசிங்க மறுத்தார். பின்னர், அது நாடாளுமன்றத்தில் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்று கூறி, அதன் செல்லுபடியை அவர் கேள்வி எழுப்பினார். "அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை, எனக்கு எதிராக எதுவும் காணப்படவில்லை" என்று அவர் கூறினார்.
எனினும் அறிக்கையை ட்வீட் செய்து, பிரான்சிஸ் ஹாரிசன் எழுதினார்: "80களின் பிற்பகுதியில் #இலங்கையில் சட்டவிரோத தடுப்புக்காவல் மற்றும் #சித்திரவதைக்காகப் பயன்படுத்தப்பட்ட கைவிடப்பட்ட வீட்டுத் தோட்டமாக இருந்த #பட்டலந்த குறித்த அரசாங்க ஜனாதிபதி விசாரணை ஆணைய அறிக்கை இருப்பதை ரணில் விக்கிரமசிங்க மறுக்க முயற்சிக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 14 மணி நேரம் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
4 நாட்கள் முன்