மட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற கோர சம்பவம்- இருவரின் பரிதாப நிலை!
accident
police
death
batticalo
eastern province
By Kalaimathy
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்ததிலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் மட்டக்களப்பு தனியார் பேருந்து உரிமையாளரும் மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்கள். இவ்வாறு உயிரிழந்தவர்கள் பரமேஸ்வரன் தனுயன், மற்றும் வினோகா துரைசிங்கம் என்ற இருவருமே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரது சடலமும் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்