தென்னிலங்கையில் மாபெரும் போராட்டத்திற்கு தயார்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கிழக்கு மாகாண வைத்தியசாலை ஊழியர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டனப் பேரணியும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுத்துள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு காவல் நிலையம் வரை சென்று மீண்டும் காந்தி பூங்கா வரை பேரணியாக சென்றுள்ளனர்.
போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மிக விரைவில் தங்களுக்கான பிரச்சினைகளை இந்த அரசாங்கம் தீர்த்து தராத பட்சத்தில் நாடு பூராகவும் உள்ள சுகாதார ஊழியர்கள் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
தங்களது கோரிக்கைக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கியதுடன் தொடர்ச்சியான போராட்டம் மாவட்ட ரீதியாகவும் இடம்பெறவுள்ளதாகவும் மாகாண ரீதியாக இடம்பெற உள்ளதாகவும் கொழும்பில் சென்று சுகாதார அமைச்சுக்கு முன்பாக தங்களது கண்டனத்தை வெளிப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.