செங்கம்பள வரவேற்புடன் சென்ற லொஹான்- ஊடகவியலாளர்களின் கேள்வியால் தலைதெறிக்க ஓட்டம்!
அநுராதபுரம் சிறைச்சாலை அரசியல் கைதிகளுக்கு துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டியதோடு, தனது நண்பர்களது பாதணிகளை நாக்கால் நக்க சொன்ன சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமாரின் அழைப்பின் பெயரில் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தபோதிலும் அமைச்சர் வெளியில் வரும் வரை காத்திருந்த ஊடகவியலாளர்கள், அமைச்சரிடம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கேள்வி கேட்க முற்பட்டபோது துண்டை காணம் துணியை காணம் என்று தலைதெறிக்க ஓடியுள்ளார் .
சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுப்பப்பட்ட நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் சந்திரகுமார் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் செங்கம்பள வரவேற்பு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.