அரசியல் நிகழ்வுகளில் அரச உயர் அதிகாரிகள்? மட்டக்களப்பு கல்விச் சமூகம் தடுமாறுகிறதா? தடம் மாறுகிறதா?

Sonnalum Kuttram
By Independent Writer Mar 10, 2024 07:41 AM GMT
Independent Writer

Independent Writer

in வதந்திகள்
Report

பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட கல்விச் சமூகம் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் வரை ஆளும் கட்சியின் பங்காளி கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் தின நிகழ்வில் கலந்து கொண்டு கட்சிக்கு ஆதரவு வழங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் தேர்தல் ஒன்று நடைபெற உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் மாவட்ட மற்றும் மாகாண அடிப்படையில் உயர் பதவிகளில் இருக்கும் பெண் அதிகாரிகள் எந்த அடிப்படையில் அரசியல் கட்சி ஒன்றின் நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்ற கேள்வி எழுகிறது.

அரச நிர்வாக நடைமுறைகளை கடைப்பிடிக்காத அதிகார போக்கு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களின் உத்தரவுகளை பிற்பற்றாத, அரச நிர்வாக நடைமுறைகளை மீறிய செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இன்று வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ராஜபக்சக்களின் அதிகாரமே நடைமுறையில் உள்ளது.

மாவட்ட செயலகம் தொடங்கி மாகாண கல்வி திணைக்களம் வரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தமிழ் மக்கள் நலன் சார்ந்து நடப்பதாக கூறும் கட்சிகள் அரச நிர்வாக நடைமுறைகளை மீறுகின்ற தவறான செயற்பாடுகளுக்கு வழியை உருவாக்கி கொடுப்பது நாளை வேறு ஒரு கட்சி அதிகாரத்திற்கு வரும் போது மாகாண, மாவட்ட அரச உயர் நிர்வாக அதிகாரிகளை இதே போன்று கட்சி தேவைகளுக்கும், கட்சி நடவடிக்கைகளுக்கும் பயன் படுத்தவே செய்வார்கள்.

அரசியல் கலப்பற்ற கல்வி நிர்வாகம், மாவட்ட அரச நிர்வாகத்தை உருவாக்க முடியாத அளவுக்கு ஆளும் கட்சி அமைச்சர்களின் அதிகார துஷ்பிரயோகம் மட்டக்களப்பு மாவட்டம் அரச அதிகாரிகளை கட்சி அரசில் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்சி நிகழ்வுகளில் நிர்வாக அரச உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள கூடாது என உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தாபன விதிக் கோவைச் சட்டம் சொல்லி உள்ள நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிகழ்வில் நேற்று பல அரச உயர் அதிகாரிகளை காணக் கூடியதாக இருந்தது.

மாவட்டத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் இதில் கலந்து கொண்டதன் ஊடாக மட்டக்களப்பு மக்களுக்கு ஒரு சமிஜையை காட்டியுள்ளனரா என்ற கேள்வி எழுகிறது.

நடுநிலையாக செயற்பட் வேண்டிய எதிர்கால மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் தின நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களை பாராட்டி பேசிய பிறகு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக இருந்து கட்சிகளின் வாக்குகளை எப்படி பக்கச்சார்வின்றி அறிவிக்க முடியும்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அந்த பணிகளில் ஈடுபடும் உயர் அதிகாரிகள் ஒரு கட்சி சார்பாக செயற்படுவது மிகப்பெரிய ஜனநாயக மீறலாகும்.

எனவே அதிகாரத்தை கையில் வைத்துள்ளவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு மாவட்ட செயலகம், மாவட்ட கல்வி நிர்வாகங்களை கட்சியுடன் இணைத்து செயற்பட நிர்ப்பந்திப்பது மிக மோசமான அரசியல் அடக்குமுறையாகும்.

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016