மட்டக்களப்பில் மதுபான போத்தலால் முகாமையாளர் மீது கொடூர தாக்குதல்!
மட்டக்களப்பில் மதுபானசாலை முகாமையாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு புதுரார் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் கடந்த ஒன்பதாம் திகதி இரவு இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர் ஒருவரின் கைது நடவடிக்கை நேற்று (16) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதுபானப் போத்தல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மதுபானசாலைக்குச் சென்ற அந்தப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கொண்ட குழுவினர் மது அருந்தியுள்ளனர்.
இதன்போது, அவர்கள் அருந்திய மதுபானத்திற்கான பணத்தை முகாமையாளர் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குழுவினர், முகாமையாளரின் அறைக்குள் புகுந்து அவர் மீது மதுபானப் போத்தலால் தலையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
தற்போது தலைமறைவாகியிருந்தவர்களில் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் கைது செய்துள்ளதோடு, ஏனைய இருவரைத் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |