எரியூட்டப்பட்ட நிலையில் சடலம்!.. அருகில் கடிதம் ஒன்றும் மீட்பு (படங்கள்)
மட்டக்களப்பு- சீலாமுனை பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சீலாமுனை - ஆனந்தன் வீதிக்கு அருகிலிருந்த வீட்டில், தனிமையிலிருந்த தி.சத்தியராஜன் (வயது -69) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மண்ணெண்ணை ஊற்றப்பட்டு, தீயிட்டு குறித்த நபர் எரிந்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறையின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த நபருக்கு அருகில் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.





