கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு)

Batticaloa Jaffna
By pavan Nov 06, 2023 09:26 AM GMT
Report

புதிய இணைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரை காணிகளை சிங்கள மக்கள் அபகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களை மேலதிக நீதவான் அன்வர் சதாத் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

எனினும், குறித்த நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வதிவிடத்தைக் கொண்ட ஆள் சரீரப்பிணையில் அவர்களை எடுப்பதற்கு தேசிய அடையாள அட்டையை கிராமசேவகர் உறுதிப்படுத்திய ஆவணங்களை நீதிமன்றில் நேற்றைய தினம் ஒப்படைக்க தாமதமான நிலையில் அவர்களை சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கையளித்ததையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குறித்த மாணவர்கள் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை ஆள்பிணையில் எடுப்பவர்கள் ஆவணங்களுடன் சிறைச்சாலைக்கு சென்று வழங்கியதன் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

இரண்டாம் இணைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சந்திவெளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 2 கிழக்கு பல்கலைக்கழக மாணவர் உள்ளிட்ட 6 பேரை மட்டக்களப்பு சந்திவெளி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் வைத்ததே கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.  

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

முதலாம் இணைப்பு 

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டக் களத்தில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், எமது நிலங்களை ஆக்கிரமிக்காதே என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறல்

தமிழர்களின் பூர்விக இடங்களான மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி குடியிருப்புகளை அமைத்து வருகின்றனர்.

அதேவேளை குறித்த பகுதியில் மேச்சலில் ஈடுபடும் தமிழ் பண்ணையாளர்களுடைய கால்நடைகள் மீது துப்பாக்கிசூடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

இவ்வாறான சூழலில் பெரும்பான்மையாளர்களின் அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கு நிரந்தர தீர்வு கோரியும் தமிழ் கட்சியினரும் தமிழ் அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்கள் அங்கு இருந்ததற்கான ஆதாரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டுள்ளது. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026