கையும் களவுமாக மாட்டிய போக்குவரத்து காவல்துறைஅதிகாரிகள்!
batticalo
bribe
traffic police
termination
By Kalaimathy
மட்டக்களப்பு போக்குவரத்து காவல்துறை பிரிவைச் சேர்ந்த மூன்று போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு குறித்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் 5000 ரூபாய் பணம் இலஞ்சமாக பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிடிபட்டவர்களே தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
தொடர்ச்சியாக மட்டக்களப்பு வீதிப் போக்குவரத்து அதிகாரிகள் கொரோனா காலங்களில் சாதாரண ஒரு நாள் கூலி தொழிலாளிகளிடமும் பலதடவை இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருந்த போதும் கையும் களவுமாக நேற்று இரவு பிடிபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி