திருகோணமலையில் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகிய வயோதிபர்!
திருகோணமலை கோமரங்கடவல காவல்துறை பிரிவிற்குட்பட்ட மல்போறுவ பகுதியில் வயோதிபர் ஒருவர் கரடி கரடியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டுக்குப் பின்னால் விறகு எடுப்பதற்காக சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை கோமரங்கடவல பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய டி. சுமதிபாலா என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இவர் காயமடைந்த நிலையில், கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மக்களின் வாக்குமூலம்
திருகோணமலையில் யான்ஓயா திட்டத்தின் ஊடாக பாரிய நீர் தேக்கமான யான்ஓயா நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது.
இதனால் மக்கள் வசிப்பதற்காக புதிதாக காணிகள் வழங்கப்பட்டு அரசினால் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.
எனினும் அப் பிரதேசத்தில் அதிக காடுகள் சூழ்ந்து இருப்பதால் மழைக்காலங்களில் யானைகள் மற்றும் கரடிகள் கிராமத்துக்குள் வருவதாகவும் அப்பகுதியினர் குறிப்பிடுகின்றனர்.