அடர்த்தியான முடி வளர்சிக்கான ஆயுர்வேத எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்கலாம்
Hair Growth
Beauty
Life Style
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அணத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 2 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
- வெந்தயம் - 2 ஸ்பூன்
- நெல்லிக்காய்- 1
பயன்படுத்தும் முறை
- முதலில் கறிவேப்பிலையை நன்கு சுத்தம் செய்துக் கொண்டு நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி மிதமான தீயில் வைத்து காய்ச்ச வேண்டும்.
- தேங்காய் எண்ணெய் சூடானதும் அதில் உலர்த்தி வைத்துள்ள கறிவேப்பிலை இலைகள், வெந்தயம் மற்றும் நெல்லிக்காயை லேசாக தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- எண்ணெய் நன்கு கொதித்து வந்தவுடன் நிறம் மாறியதும் எண்ணெய்யை வடிகட்டவும்.
- இந்த எண்ணெய்யை வாரத்திற்கு ஒருமுறை தலைமுடியின் வேரிலிருந்து நுனி வரை தடவவும்.
- தொடர்ச்சியாக கறிவேப்பிலை எண்ணெயை பயன்படுத்தி வர தலைமுடி வேகமாக வளர உதவியாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்