பைடன் - ஜின்பிங் நான்கு மணிநேர பேச்சு : ஒரே சொல்லில் உறவை தகர்த்தாரா பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இடையில் நடத்தப்பட்ட நான்கு மணிநேர பேச்சு வார்த்தைகளின் போது அமெரிக்க-சீன உறவுகளை சீராக்குவதற்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராணுவத் தொடர்பை மீட்டெடுப்பதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டுடன் நடத்தப்பட்ட இந்தச் சந்திப்புக்களில் முன்னேற்றம் இருந்த போதிலும், ஜி ஜின்பிங்கை ஒரு சர்வாதிகாரியாகவே கருதுவதாக பைடன் குறிப்பிட்ட விடயம் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இரு தரப்பு உறவு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இடையில் நேற்று கலிபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடத்தப்பட்ட நான்கு மணிநேர பேச்சுவார்த்தைகள் இரண்டு தரப்பு உறவுகளை சுமூக மாக்குவதற்கான முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் சடுதியாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது தொலைபேசி மூலம் பேசுவதற்கு இரண்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டமை ஒரு முக்கிய விடயமாக பதிவாகியுள்ளது.
தகவல்தொடர்புகள் இல்லாதது தான் விபத்துகள் நடப்பதற்கு காரணமென குறிப்பிட்ட பைடன், இனிமேல் இரண்டு தலைவர்களும் தொலைபேசியில் உடனடியாகப் பேச முடியும்' என்றும் கூறினார்.
முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது சில ஆக்கபூர்வமான மற்றும் பயனுள்ள விவாதங்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட பைடன் இரண்டு வல்லரசு நாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக பதற்றம் நிலவிய விடயத்தை மறுக்கவில்லை.
சீனாவுக்கு அமெரிக்காவை மிஞ்சவோ அல்லது வீழ்த்தவோ எந்த திட்டமும் இல்லையென்பதால் சீனாவை அடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ அமெரிக்கா திட்டமிடக்கூடாதெனவும் சீனத்தலைவர் ஒருகட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தாய்வான் பற்றிய கவலைகள் அமெரிக்க-சீனா உறவுகளில் மிகப்பெரிய ஆபத்தான பிரச்சினை என்ற விடயமும் இந்த பேச்சுகளின் போது வெளிப்பட்டிருந்தது.
புதிய சர்ச்சை
பின்னர் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பைடன், இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம், அமெரிக்கா-சீனாவுக்கு இடையில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் இருநாட்டு இராணுவங்களும் தங்கள் தொடர்புகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டதாக கூறினார்.
ஒரு கட்டத்தில் செய்தியாளர்களுடம் பேசிய பைடன், ஜின்பிங்கை சர்வாதிகாரி என் குறிப்பிட்டது புதிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

பல தடைகளை கடந்து, அமெரிக்க-சீன உறவுகளில் முன்னேற்றம் நிகழ்வதுபோல் தோன்றியபோது, அதனை ஒரே சொல்லில் பைடன் தகர்த்துவிட்டதான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னரான செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு, பைடன் விடைபெறவிருந்த போது ஒரு நிருபர் அவரிடம் 'இன்னும் ஷி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அழைப்பீர்களா?' என வினவியபொது அதற்கு பதிலளித்த பைடன் கம்யூனிஸ்ட் நாடான சீனாவை வழிநடத்தும் தலைவர் ஒரு சர்வாதிகாரி தான் என பதிலளித்திருந்தார்.
நேற்றைய சந்திப்புகளின் போது இரண்டு தரப்புக்கும் இடையில் இராணுவத் தகவல் தொடர்புகளை மீண்டும் ஆரம்பிப்பது மற்றும் அண்மைக் காலங்களில் பதற்றத்தை ஏற்படுத்திய சில விடயங்களிலும் இரண்டு தரப்பும் சில ஒப்பந்தங்களை அறிவித்துள்ளமை சாதமாக நோக்கப்படுகிறது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்