ரஷ்யா மீது அமெரிக்க அரச தலைவர் விதித்த தடை
போர் அச்சுறுத்தலால் உக்ரைனில் இருந்து தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது.
இதன்படி உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள் வெளியேற தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என உலக தலைவர்கள் எச்சரித்தனர். அதன்படி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது நேற்று பொருளாதார தடைகளை அறிவித்தன.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதிப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், ஜப்பான், அவுஸ்ரேலியா, கனடா ஆகிய நாடுகளும் ரஷ்ய நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனிநபர்கள் மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவின் நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஏஜி பைப்லைன் நிர்வாகம் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
