டுபாயில் இலங்கையருக்கு அடித்தது அதிஷ்டம்!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பு ஒன்றில் இலங்கையர் ஒருவர் 15 மில்லியன் ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹம் வெற்றி பெற்றுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற பிக் டிக்கட் ( Big Ticket) என்னும் லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த இலங்கையர் இவ்வாறு 15 மில்லியன் திர்ஹம் வெற்றியீட்டியுள்ளார்.
213288 என்னும் இலக்கமுடைய லொத்தர் சீட்டிற்கு இந்த ஜாக்பொட் பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது.
டுபாயில் பொறியியலாளராக கடமையாற்றி வரும், இலங்கையைச் சேர்ந்த ரசிக்க ஜே.டி.எஸ் என்ற நபருக்கே இவ்வாறு முதல் பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது.
நண்பர்களுடன் வெளியே சென்றிருந்த வேளையில் லொத்தர் சீட்டிலுப்பு ஏற்பாட்டுக்குழுவினர் இந்த வெற்றி குறித்த விபரங்களை தொலைபேசி மூலம் ரசிக்கவிற்கு அறிவித்திருந்தனர்.
இதேவேளை கடந்த மாதம் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பிலும் இலங்கையர் ஒருவர் முதல் பரிசு வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது