எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் குறித்து வெளியான தகவல்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் குறித்து அவைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த சட்டமூலம் அடுத்த ஆறு வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து இலாபம் ஈட்டுவதைத் தடுப்பதும், பொது சேவையில் நேர்மையை மேம்படுத்துவதும் முன்மொழியப்பட்ட சட்டத்தின் முதன்மை நோக்கம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
அமைச்சர்களுக்கான குடியிருப்புகள்
மேலும், கொழும்பில் அமைந்துள்ள நான்கு அமைச்சர்களுக்கான குடியிருப்புகள், தற்போதைய நிர்வாக ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, நீதித்துறை நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 1979 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, ‘நாடாளுமன்ற ஓய்வூதிய (இரத்துச் செய்தல்) சட்டமூலம்’ அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் (Harshana Nanayakkara) இந்தச் சட்டமூலம் கடந்த 07 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |