திருகோணமலையில் பட்டாசு கொளுத்தி வரவேற்கப்பட்ட பேரணி! (காணொளி)
Sri Lankan Tamils
Trincomalee
By pavan
தமிழர் தாயகத்தை மீட்போம், சுயநிர்ணயத்தை காப்போம் எனும் கோசங்களுடன் கடந்த 4ஆம் திகதி சிறிலங்காவின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி ஆரம்பமான உரிமைக்கான பேரணி தற்போது திருகோணமலையை சென்றடைந்துள்ளது.
திருகோணமலையை சென்றடைந்த பேரணிக்கு அங்கு கூடியிருந்த தமிழ் உணர்வாளர்கள் உற்சாக வரவேற்பளித்து வரவேற்றதோடு, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் எழுச்சிப் பேரணியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.
சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்தை தமிழரின் கருப்பு தினமாக பிரகடனப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் பேரணி தற்போது, கிழக்கு பல்கலைக்கழக வளாக மாணவர்களின் இணைவுடன் திருமலை நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
அங்கு சென்ற இந்த பேரணியை திருகோணமலை மக்கள் பட்டாசு கொளுத்தி வரவேற்றனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி