அவுஸ்திரேலியா செல்லும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் வெளியிட்ட செய்தி!!
படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வரும் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
மெல்பேர்னில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
"இறைமையுள்ள எல்லை நடவடிக்கை தொடர்பான எங்கள் திட்டம் தெளிவாக உள்ளது ஆள்கடத்தல்காரர்கள் துன்பங்களை நெருக்கடிகளை தங்களிற்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றனர் அவர்கள் மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றனர்.
ஆள்கடத்தல்களில் பெரும்பாலும் குற்றவாளி கும்பல்களே ஈடுபடுகின்றன இதனாலேயே அவர்கள் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் எனது அரசாங்கம் மனிதாபிமானத்தில் பலவீனமாகயிராது ஆனால் எல்லையில் பலமாகயிருக்கும்.
பல அரசாங்கங்கள் நீண்டகாலமாக செயற்பட்டது போன்று எங்கள் அரசாங்கமும் சரியான விடயங்களை செய்வதற்கான சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும்", எனக் குறிப்பிட்டார்.
உள்துறை அமைச்சரின் இலங்கைக்கான விஜயம்
அவுஸ்திரேலியாவில் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் தெரிவானதன் பின்னர், இலங்கையில் இருந்து பல படகுகளில் ஏதிலிகள் சென்றுள்ளனர்.
அவர்கள் அனைவரும் எல்லையில் தடுக்கப்பட்டு அவுஸ்திரேலிய அதிகாரிகளால் நாடுகடத்தப்படுகின்றனர்.
இந்தநிலையில் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்கின்ற அனைவரும், அங்கு குடியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் என்றும் செய்தியை வழங்கும் வகையில், அவுஸ்திரேலியா தமது உள்துறை அமைச்சர் க்ளெயார் ஓநீலை இலங்கைக்கு அனுப்புகிறது.
இன்று இலங்கை வருகின்ற அவர், அரச தலைவர், பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவார்.
தொடர்புடைய செய்தி, இலங்கைக்கு வரும் அவுஸ்திரேலிய அமைச்சர்! கோட்டாபய, ரணிலை சந்திக்கிறார்