மட்டக்களப்பில் போதை விவகாரத்தால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பில் (Batticaloa) நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நபரொவர் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் சடலம் நேற்று (10) வாழசைசேனை நாசிவன்தீவு ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
முறக்கொட்டாஞ்சேனை சேமன் வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய சின்னத்தம்பி செல்வராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வழக்கு தாக்குதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்திவெளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்து நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவரை பிணையில் விடுவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றில் தண்டப்பணம் செலத்துவதற்கு பணத் தேவை ஏற்பட்டதையடுத்து மகளிடம் 30 ஆயிரம் ரூபா பணத்தை கோரியுள்ள நிலையில் அவரிடம் அந்தளவுக்கு பணம் இல்லாததை தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை
இதன்பின், தொடர்ந்து புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடிவந்துள்ளனர் என காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நாசிவன்தீவு ஆற்றில் சடலம் ஒன்று நீரில் மூழ்கிய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு அறிவித்த நிலையில் குறித்த சடலத்தை சம்பவதினமான நேற்று (10) காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
பின்பு, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
