பயணப் பையினுள் இருந்த சடலம்! தென்னிலங்கை பிரதேசமொன்றில் பரபரப்பு
சீதுவை, மூகலங்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் படுக்கையறையில் இருந்த பயணப் பையினுள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 79 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
அதன் பின்னர் வீட்டைச் சோதனையிட்ட போதே, பயணப் பையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சிசிரிவி கமராக்கள் மாயம்
உயிரிழந்தவர் அந்தப் பகுதியில் தனியாக வசித்து வந்த 79 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளில் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி (CCTV) கமராக்கள் அகற்றப்பட்டிருப்பதும், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
கைது நடவடிக்கை
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில், அந்தப் பெண் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், மரணம் தொடர்பான நீதவான் விசாரணையும், சடலம் மீதான பிரேத பரிசோதனையும் இன்று நடத்தப்படவுள்ளன.

இதேவேளை, இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அண்டை வீட்டை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருகில் உள்ள வீடுகளில் இருந்து பெறப்பட்ட சிசிரிவி காட்சிகளின் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலமே இந்தச் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |