இலங்கை வரும் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்: வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
புதிய இணைப்பு
City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் விசேட விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
City of Dreams SriLanka அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் (Shah Rukh Khan) ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஷாருக்கான் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரமாண்ட திறப்பு விழா
2025, ஒகஸ்ட் 2 இல் இலங்கையில் நடத்தப்படும், சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் (City of Dreams) என்ற விருந்தகத்தின் பிரமாண்ட திறப்பு விழாவிலேயே சாருக்கான் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இது உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் முன்னதாக 2004 ஆம் ஆண்டு ஷாருக்கான் இலங்கை வந்திருந்தார்.
சாருக்கான் இசை நிகழ்ச்சியை முடித்த அதே நேரத்தில் அரங்குகளில் குண்டுவெடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 3 மணி நேரம் முன்