பாகிஸ்தானை உலுக்கிய குண்டு வெடிப்பு - உயிரிழப்பு 44 ஆக உயர்வு
பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பினால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
நேற்றய தினம் (30) பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத வேளையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கட்சியின் முக்கிய பிரமுகர் உட்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள்

அவர்களோடு காயமடைந்த 80 பேர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்
அத்தோடு இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் மனித குண்டு வெடிப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதோடு, அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.