வெடிகுண்டு அச்சுறுத்தல் -உடனடியாக தரையிறக்கப்பட்ட விமானம்
விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்
வெடிகுண்டு அச்சுறுத்தலை அடுத்து விமானம் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் சிங்கப்பூரில் இருந்து பதிவாகியுள்ளது.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றே திடீரென தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென தனது பயணப் பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். இதனையடுத்து உடனடியாகவே பாதுகாப்பு நடவடிக்கையாக சாங்கி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமான ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
போர் விமானங்களின் பாதுகாப்புடன்
சிங்கப்பூர் விமானப் படையின் எஃப்-16 ரக போர் விமானங்களின் பாதுகாப்புடன் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் இது குறித்த புகைப்படங்களைத் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். யாரோ ஒரு ஆடவர் விமானத்தில் வெடிகுண்டு என்று கத்தியதால் நான்கு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது என்றும் பின்னர் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் கூறியிருந்தார்.
Fighter jets were circling around us for a good hour until we landed. I thought someone important just arrived and didn’t know that was us😂 This guy yelled at the back of airplane saying there is a 💣. 4 hours delay because of this guy and he got arrested.
— Vera 🍌💕🐒Token2049🇸🇬 (@veratheape) September 28, 2022
Singapore! Here I am😬 pic.twitter.com/hcf1wQlrpo
தனிமையான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட விமானம்
விமானம் தரை இறங்கியதும் சாங்கி விமான முனையம் 3ல் உள்ள ஓடுபாதையின் தனிமையான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க, வெடிகுண்டு தற்காப்புக் குழுவும் விமான நிலைய காவல் துறைப் பிரிவும் விசாரணைக்கு அனுப்பப்பட்டன என்றும் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டது என்றும் பாதுகாப்பு அமைச்சு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.