ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருந்து தப்பித்த போரிஸ் ஜோன்சன் பயணித்த தொடருந்து
முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த தொடருந்து பாதையை ரஷ்ய ட்ரோன் தாக்கிய சம்பவம் தொடர்பாக கிரெம்ளின் பதிலளித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில், கீவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு போரிஸ் ஜான்சன் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போலந்து எல்லைக்கு அருகிலுள்ள யஹொடின் பகுதியில், ஜான்சன் பயணித்த தொடருந்துக்கு பின்னால் சென்ற மற்றொரு பயணிகள் தொடருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெம்ளின் பேச்சாளர்
இந்நிலையில் நேற்று இதுகுறித்து பேசிய கிரெம்ளின் பேச்சாளர், “இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா பொறுப்பல்ல என்று மறுக்கவில்லை. அதேவேளை, ரஷ்யப் படைகள் உக்ரைன் முழுவதும் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும்” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளமான X இல் போரிஸ் ஜான்சன், “போலந்து எல்லையில் நின்றுகொண்டிருந்த உக்ரைனிய தொடருந்து இன்ஜினை தகர்க்க புடினைத் தூண்டிய அந்த சிந்தனை என்னவென்று எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கீவிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் திரும்பிச் செல்ல அடிக்கடி பயன்படுத்தப்படும் தொடருந்து பாதையே இது என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தச் சம்பவத்தால் போரிஸ் ஜான்சன் வெளியேற்றப்படவோ அல்லது அவரது பயணம் தாமதமடையவோ இல்லை.
ஐரோப்பிய அதிகாரிகள் பயணித்ததாகக் கூறப்படும் எந்தவொரு தொடருந்தும் இந்தத் தாக்குதலில் சிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 21 மணி நேரம் முன்