யாழில் துப்பாக்கி சூட்டில் பலியான சிறுவன்! உறவினரின் பகிரங்க குற்றச்சாட்டு
யாழில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவன் தொடர்பில் அவரது சித்தி சில விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
வேலைக்கு செல்வதற்கான ஆட்களை ஏற்றுவதற்காக சென்ற போதே குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
காவல்துறையின் கட்டளை
“அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

யாழில். காவல்துறையின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்திய போது , வாகனத்தினை ஓட்டி சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறுவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத போதிலும் , அவர் வாகனம் ஓட்டுவதினை தொழிலாக செய்து வந்தார். காவல்துறைக்கு கையூட்டல்களை வழங்கி சாரதி அனுமதி பத்திரம் இன்றி சாரத்தியம் செய்து வந்தார்.
இதன்படி அருவி வெட்டு நடவடிக்கைக்காக வேலணையில் வேலையாட்களை ஏற்றுவதற்காக சென்ற போது தன்னிடம் பணம் இல்லாததால்தான் காவல்துறை மறித்த போது நிறுத்தாமல் பயணித்துள்ளனர்.
இதன் காரணமாக காவல்துறையினர் சுட்டுள்ளனர். அவருடன் வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரும் நெருங்கிய உறவினர்களே. குடும்ப கஷ்டம் காரணமாகவே 17 வயதில் அவர் உழைக்க சென்றார். அவரை அநியாயமாக சுட்டு கொன்று விட்டார்கள்“ என கூறியுள்ளார்.
மேலதிக தகவல் - தீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |