பிரித்தானியாவின் அதிரடி தடை : கருணாவை தொடர்ந்து தானாக வந்து சிக்கிய மைத்திரி

Karuna Amman Maithripala Sirisena Sri Lanka United Kingdom
By Shalini Balachandran Mar 27, 2025 05:58 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

மூன்று முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் ஒரு முன்னாள் துணை அமைச்சர் மீது பிரித்தானியா (United Kingdom) விதித்துள்ள தடை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (maithripala sirisena) தெரிவித்த கருத்துக்கள் ஊடாக தானாக அவரே வந்து சிக்கியுள்ளதாக பிரித்தானிய அரசியல் ஆய்வாளர், தி.திபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva), முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட (Wasantha Karannagoda), முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூர்யா (Jagath Jayasuriya) மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் - Karuna Amman) ஆகிய நான்கு நபர்கள் மீது தடைகளை விதிப்பதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.

இது அரசியல் வட்டாரத்தில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் பல அரசியல் தலைமைகள் இது தொடர்பில் தங்களது நிலைப்பாடுகளை வெளியிட்டு வந்தனர்.

இந்தநிலையில், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கருத்தை அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதில், தேசிய வீரர்களுக்கு சர்வதேச அளவில் செய்யப்பட்ட அநீதியால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன் எனவும், இந்த பாதுகாப்புத் தலைவர்கள் தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் போராடியவர்கள் அத்தோடு அவர்கள் மக்களைக் கொல்லவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்தோடு, தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவன் நான் எனவே, கடைசி இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும் அதனால், எங்கள் முப்படை அதிகாரிகளுக்கு செய்யப்பட்டது மிகவும் அநீதியானது என தெரிவித்திருந்தார்.

குறித்த பிரித்தானிய தடை தொடர்பில் பலதரப்பட்ட சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இவ்வாறான கருத்தை அவர் வெளியிட்டிருப்பது தானாக அவர் வலையில் வந்து சிக்குவதாக அமைந்துள்ளதாக தி.திபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அந்த காலத்தில் இடம்பெற்ற போர் குற்றத்தில் மைத்திரியும் ஒரு பொறுப்பாளிதான் எனவும், அவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய காலம் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பிரித்தானிய தடையின் பின்னணி, சிக்கப்போகும் இலங்கை அரசியல் தலைமைகள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவாக கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,  


வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அரசின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கை: சிக்கித் தவிக்கும் தேசபந்து தென்னகோன்

அரசின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கை: சிக்கித் தவிக்கும் தேசபந்து தென்னகோன்

யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, வெள்ளவத்தை

29 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கிளிநொச்சி, Toronto, Canada

31 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
மரண அறிவித்தல்

Myliddy, Liverpool, United Kingdom, Gerrards Cross, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, England, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, பேர்லின், Germany

14 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, வவுனியா

31 Mar, 2005
மரண அறிவித்தல்

கரவெட்டி, Savigny-le-Temple, France

27 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, பொத்துவில்

02 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Gravesend, United Kingdom, Kent, United Kingdom

01 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கொழும்பு

01 Mar, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

27 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023