சிறிலங்கா இராணுவ தளபதிகளுக்கு தடை : பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

Mullivaikal Remembrance Day Sri Lanka United Kingdom World Keir Starmer
By Raghav May 17, 2025 06:58 AM GMT
Report

இலங்கையில் (Sri Lanka) நடைபெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதிகளுக்கு பிரித்தானியா விதித்த தடை குறித்து தாம் திருப்தியடைவதாக பிரித்தானிய (United Kingdom) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.

2025 மே மாதம் நடைபெறும் முல்லிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பரந்துபட்ட மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவு கூருவதற்காக இலங்கையிலும் உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்று திரள்கின்றனர்.

வடக்கில் பறிபோகப் போகும் துயிலுமில்லங்கள்

வடக்கில் பறிபோகப் போகும் துயிலுமில்லங்கள்

கடந்தகால அட்டுழியங்கள்

பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும், நினைவுகூருவதில் நான் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன்.

சிறிலங்கா இராணுவ தளபதிகளுக்கு தடை : பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு | British Government Sanctions Sri Lanka Commanders

அந்த அநீதிகளின் கொடுமைகளின் பாதிப்புகள் நினைவுகளுடன் வாழும் உயிர் பிழைத்தவர்கள் அன்புக்குரியவர்களுடன் உடன்நிற்கின்றோம்.

சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வதற்கு,கடந்தகால அட்டுழியங்களை ஏற்றுக்கொள்வதும், பொறுப்புக்கூறலும் அவசியம் என்பதை நான் அறிவேன்.

கொட்டாஞ்சேனையில் நடந்த துப்பாக்கிச் சூடு - காவல்துறை வெளியிட்ட தகவல்

கொட்டாஞ்சேனையில் நடந்த துப்பாக்கிச் சூடு - காவல்துறை வெளியிட்ட தகவல்

இலங்கையின் புதிய அரசு

குற்றமிழைத்தவர்களை நீதியின் முன்நிறுத்தவேண்டும். என கடந்த வருடம் நான் எழுதியிருந்தேன். இதன்காரணமாக இம்முறை இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக நாங்கள் சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்க முடிந்தமை குறித்து திருப்தியடைகின்றேன்.

சிறிலங்கா இராணுவ தளபதிகளுக்கு தடை : பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு | British Government Sanctions Sri Lanka Commanders

நீதி மற்றும் அமைதியை தொடர்ந்து பின்பற்றவேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகின்றது.

நீடித்த நல்லிணக்கம் மற்றும் ஸ்திரதன்மையை அடைவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கத்துடனும்,இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள சிவில் சமூகஅமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இணைந்து நாங்கள் ஆக்கபூர்வமாக பணியாற்றிவருகின்றோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சார்பாக ஐநாவில் காட்டிக் கொடுக்க தயாராகும் தமிழன் !

இலங்கைக்கு சார்பாக ஐநாவில் காட்டிக் கொடுக்க தயாராகும் தமிழன் !

போர் காலத்தில் மனித உரிமை மீறல்

2025 மார்ச் 24ஆம் தேதி, பிரித்தானிய அரசு இலங்கையின் உள்நாட்டுப் போர் காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு முக்கியர்களுக்கு பயணத் தடை மற்றும் சொத்துத் தடை உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை விதித்தது .

சிறிலங்கா இராணுவ தளபதிகளுக்கு தடை : பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு | British Government Sanctions Sri Lanka Commanders

இந்த நடவடிக்கை, இலங்கையில் நீண்டகாலமாக நிலவிய தண்டனை இல்லாத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் பிரித்தானிய அரசினால் எடுக்கப்பட்டது.

தடைகள் விதிக்கப்பட்டவர்கள்

01.ஷவேந்திர சில்வா : இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி. 2009ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற போர் நடவடிக்கைகளின் போது, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. 

02.வசந்த கரண்ணாகொட : முன்னாள் கடற்படை தளபதி. 2008 - 2009 காலப்பகுதியில் கடற்படை உளவுத்துறை அதிகாரிகள் 11 பேரை கடத்தி, அவர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

03.ஜகத் ஜயசூரிய : முன்னாள் இராணுவ தளபதி. அவரது கட்டுப்பாட்டில் செயல்பட்ட 'ஜோசப் முகாம்' திடலில், கைதிகள் மீது சித்திரவதை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

04.விநாயகமூர்த்தி முரளிதரன் : விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி மற்றும் பின்னர் அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட கருணா குழுவின் தலைவர். குழந்தை படைவீரர்கள் சேர்த்தல், சுரண்டல், மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன.

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்

கனடாவிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

சஜித்தின் அழைப்பிற்கு மொட்டு இணக்கம்: நாமலின் அறிவிப்பு

சஜித்தின் அழைப்பிற்கு மொட்டு இணக்கம்: நாமலின் அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025