தமிழர் பிரதேசத்தில் 3 பெண்கள் அதிரடி கைது
மட்டக்களப்பில் (Batticaloa) சட்டவிரோதமாக இயங்கிய விபச்சார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பாசிக்குடாவில் இயங்கிய விபச்சார விடுதியே நேற்று (07) இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த விபச்சார விடுதியை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் முற்றுகையிட்டு பெண் முகாமையாளர் உட்பட மூன்று பெண்களை கைது செய்துள்ளனர்.
விபச்சார விடுதி
நீண்டகாலமாக ஹோட்டல் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடாத்தி வருவது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சிரேஸ்ட காவல் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறை பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான காவல்துறை குறித்த விபச்சார விடுதி தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்பித்து அனுமதியை பெற்றுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதன்பின்பு, குறித்த விடுதியை சம்பவதினமான நேற்று மாலை 5.00 மணிக்கு முற்றுகையிட்டுள்ளனர்.
இதன் போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த இரண்டு பெண்கள் மற்றும் விடுதியின் பெண் முகாமையாளர் உட்பட மூன்று பெண்களை கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்