தென்மராட்சியில் இராணுவத்தின் கொடூரம்! தம்பியை தொலைத்த சாட்சியின் அவலநிலை
1996ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி தென்மராட்சியில் உள்ள நுணாவில் பகுதியில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட தனது தம்பியின் நிலை குறித்து, அவரது சகோதரர் சில உருக்கமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
“தனது தம்பி அந்த நேரத்தில் சர்வோதய இயக்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து, அவரும் அங்கிருந்த ஒரு முதிய காவலாளியும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
காவலாளி பின்னர் விடுவிக்கப்பட்டாலும், தனது தம்பி கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்றுவரை காணாமல் போயுள்ளார்.
தாங்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இராணுவம், காவல்துறை மற்றும் சிவில் அமைப்புகள் மூலம் தீவிரமாகத் தேடினோம்.
பின்னர், யாழ்ப்பாண மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைத்து காணாமல் போனோர் சங்கம் உருவாக்கப்பட்டது.
அதன்போது, 1997ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து முறையிட்டும், தங்கள் கோரிக்கைகளுக்கு எந்தவொரு தீர்க்கமான பதிலும் கிடைக்கவில்லை.”
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |