கட்டுமஸ்து & அட்டமஸ்து காவியின் சிறுமி! கிளற...கிளற அதிர்ச்சிகள்! அலறல்கள்!
உலகத்துக்குரிய உண்மையான வெசாக் பௌர்ணமி கடந்த முதலாம் திகதி கடந்தாலும் சிறிலங்காவின் அரச வெசாக் வாரம் நேற்றுமுதல் கடந்துவருகிறது.
மாந்தர்களின் அறியாமை இருளை புத்தரின் போதனைகள் ஒளி வெற்றிகொள்வதை குறிப்பதே வெசாக்; தார்ப்பரியம். வழமையாக வெசாக் நிகழ்வுகளில் புத்தர் குறித்த ஜாதகக்கதைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த முறையும் ஆனால் உண்டு. ஆனால் சிறிலங்காவில்; இப்போது புத்தரின் ஜாதக கதைகள் அல்ல பேசுபொருள். மாறாக பிக்குகளின் அதிர்ச்சிகர ஒழுக்ககேடுகளே பேசுபொருள்.
அதிலும் அனுராதபுரத்தின் பௌத்த அட்டமஸ்தானி என்ற பெரும் பொறுப்பில் உள்ள கட்டுமஸ்து பிக்குவின் அதிர்ச்சிகர சிறார் பாலியல் குற்றங்கள் உட்பட்ட பல ஒழுக்ககேடு கதைகள் முக்கிய தீவிர கொதிநிலை பேசுபொருளாக உலாவருகின்றன.
இப்போது இந்தவிடயத்தில் ஜனாதிபதி அநுர முதல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வரை அலறுகிறார்கள். இவற்றை தடுக்க புதிய திட்டங்கள் தேவையென பதறுகிறார்கள்.
அநுர தனது தேசியமக்கள் சக்தியின் ஆட்சியை சட்டத்தின் முன்னர் யாவரும் சமன் என்ற ஆட்சி என காட்சிப்படுத்திக்கொண்டாலும் பிக்குகளை விலங்கிட்டு, எப்படி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது? என மனவேதனைகொண்டு பௌத்த பிக்குகனை விசாரிக்க தம்ம நீதிமன்றங்கள் விரைவில் வரும் என்கிறார்.
பௌத்தபிக்குகளின் பாலியல் குற்றங்கள் தமிழர்தாயகம் முதல் சிறிலங்காவரை பொதுமையானதாக இருந்தாலும் இந்த குற்றங்களின் ஒரு குறுக்குவெட்டு அதிர்வு ஒரு சிறுமியால் உருவாக்கப்பட்ட நிலையில் இந்த அதிர்ச்சிகர விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |