அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த மிரட்டல் : உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றம்
ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என்று ஈரான் இராணுவம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.
அதன்படி, கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் 3 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை
ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 3.75 சதவீதம் உயர்ந்து, $97.8 ஆகப் பதிவாகியுள்ளது. அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராகி வரும் வேளையில், இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் ஒரு மோதல் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இன்று அதிகாலை வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்திருந்தது.
அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
எந்த நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஈரானிடமிருந்து பல தாக்குதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குவைத் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |