முல்லைத்தீவில் முளைத்த பௌத்த விகாரை: சர்ச்சைகளின் பின்னணி இதுதான்
முல்லைத்தீவில் (Mullaitivu) தனியார் காணி ஒன்றில் உருவான பௌத்த உருவம் குறித்து நபர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “வித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமையில் சிங்களம் கற்பிக்கும் நிலையம் ஒன்றினை நான் நடாத்தி வருகின்றேன்.
பௌத்த விகாரை
பொசன் போயா நிகழ்வினை எவ்வாறு கொண்டாடுவது என மாணவர்களுக்கு விளக்கமளிக்கவே பொசன் போயா நிகழ்வை வரைந்து காட்சிப்படுத்தியிருந்தேன்.
பௌத்த மதம் எவ்வாறு இலங்கைக்கு பரப்பப்பட்டது என்பதையே காட்சிப்படுத்தியிருந்தேன்.
அதனை சிலர் வந்து உடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள், நான் இது சம்பந்தமாக முள்ளியவளை காவல்நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளேன்.
பௌத்தமதம்
நான் மதத்தை பரப்புவதற்கோ அல்லது பௌத்தமதம் இங்கே வரவேண்டும் என்பதற்காக செய்யவில்லை.
இங்கே கற்கும் பிள்ளைகளுக்கு செயல்முறை வடிவிலே செய்து விளக்கமளிக்கவே இதை செய்தேன்.
வெளியே தெரியும் வகையிலே காட்சிப்படுத்தினாலே மாணவர்களால் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்.
மகிந்த தேரரின் வருகையும், இலங்கையில் பௌத்த மதம் ஸ்தாபித்தலும் என்றால் தேவநம்பிய தீசன் காலத்தில் மகிந்ததேரர் பிக்குணி சங்கமித்தை வருகை தந்து எவ்வாறு பௌத்த மதத்தை ஸ்தாபித்தனர் என்பது தொடர்பான படங்களுமே பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
