பழிவாங்கும் படலம் ஆரம்பம்...! சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான் - முக்கிய தலைகளை போட்டு தள்ளிய இஸ்ரேல்
புதிய இணைப்பு
ஈரான் (Iran) மீது இஸ்ரேலின் operation Rising Lion வான்வழித் தாக்குதல்களில் பல இராணுவத் தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் (Iran) உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்ததுடன் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் (Iran) இராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் சிவப்புக் கொடி
இந்நிலையில் போர் பதற்றம் மேலும் அதிகரிக்கும் வகையில், கோமில் உள்ள ஜம்கரன் மசூதியில் ஈரான் சிவப்புக் கொடியை ஏற்றியுள்ளது.
இச்சிவப்புக் கொடியானது ஷியா பாரம்பரியத்தில் நீதி மற்றும் பழிவாங்கலுக்கான அழைப்பைக் குறிக்கிறது.
நான்காம் இணைப்பு
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஆறு ஈரானிய (Iran) அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்றாம் இணைப்பு
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் மீது சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தற்போது இந்த அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு
இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் (Iran) உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் மத்தியில் பேசிய போதே அயத்துல்லா அலி கமேனி (Seyyed Ali Hosseini Khameneh) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இஸ்ரேலிய தாக்குதல்களில் பல இராணுவத் தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதை அவர் உறுதிப்பிடுத்தி உள்ளார்.
முதலாம் இணைப்பு
ஈரான் (Iran) தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
தேவைப்பட்டால் தாக்குதல்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இந்த தாக்குதலில், ஈரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி (Hossein Salam) இஸ்ரேலிய (Israel) தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடுமையான பதிலடி
இதேவேளை, நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் வெடிப்புகள் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதலில் மூத்த அணு விஞ்ஞானிகள் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அப்பாசியும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது அணுசக்தி திட்டத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ''கடுமையான பதிலடி'' கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக ஈரானிய பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
