இரண்டரை கோடி ரூபா பணத்தை மக்களுக்கு பகிர்ந்தளித்த வர்த்தகர்
people
money
buisnessman
distribute
By Jaso
அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து தற்போது நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமது நாளாந்த வாழ்வுக்கு மக்கள் அவதியுறுவதும் தகவல்களாக வெளிவந்துள்ளன.
அவ்வாறு அவதியுறும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வர்த்தகர் ஒருவர் உதவி புரிந்துள்ளார்.
இதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தனது இரண்டரை கோடி ரூபா பணத்தை குறித்த வர்த்தகர் பகிர்ந்தளித்த சம்பவமொன்று களனி பகுதியில் பதிவாகியுள்ளது.
களனி பகுதியைச் சேர்ந்த C.மஞ்சுள பெரேரா என்ற வர்த்தகரே, இவ்வாறு பணத்தை மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார். ஹுனுபிட்டி − நாஹேன பகுதி மக்களுக்கு தலா 1000 ரூபா விகிதம், இந்த இரண்டரை கோடி ரூபா பணத்தையும் பகிர்ந்தளித்துள்ளதாக தெரிய வருகின்றது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி