ஹட்டனில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! ஒருவர் பலி! 22 பேர் காயம்
புதிய இணைப்பு
ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் 22 பேர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து காவல்துறை தெரிவித்த கருத்தின்படி,
“டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்றே, பிற்பகல் 3 மணியளவில் டிக்கோயா, பட்டல்கல பகுதியில் வைத்து எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்கள், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற வேளையில் பேருந்தில் சுமார் 35 பயணிகள் பயணித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (29) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் ஹட்டன் – போடைஸ் வழியாக டிக்கோயா பட்டல்கல பகுதியில் இடம்பெற்றது.
நிகழ்ந்த அனர்த்தம்
மற்றொரு பேருந்திற்கு இடம் கொடுக்க முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிலரின் நிலை கவலைக்கிடம்
விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நேரத்தில் பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்திருந்ததாகவும், ஓட்டுநரும் உதவியாளரும் காயமடைந்துள்ளதாகவும் ஹட்டன் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |