ஜூலை 1 பேருந்து கட்டணத் திருத்தம் - பறந்த கோரிக்கை
ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் பேருந்து கட்டணத் திருத்தத்தை ஜூலை 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து சங்கங்கள் நேற்று (24) தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் எழுத்துப்பூர்வமாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
குறித்த விடயத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ''ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் பேருந்து கட்டணத் திருத்தம் 5 ஆம் திகதி செயல்படுத்தப்படும் என நாங்கள் முன்னதாக அறிவித்திருந்தோம்.

இந்த மாத இறுதியில் வரவிருக்கும் எரிபொருள் விலை மாற்றத்தை பரிசீலித்த பிறகு, எங்களின் அனைத்து சங்கங்களுடனும் கலந்துரையாடி, அவர்களின் ஒப்புதலைப் பெற்று, பேருந்து கட்டணத்தை வழக்கம் போல் ஜூலை 1 ஆம் திகதி திருத்தியமைக்க நேற்று எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிட முடிவு செய்தோம்.
மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குவுடனும் இந்த 5 நாட்களுக்குள் கலந்துரையாட முயற்சி செய்து வருகிறோம்.
நாங்கள் எங்கள் அனைத்து விலைகளையும் தெரிவித்துவிட்டோம். இருப்பினும், ஜூலை மாதத்தில் செய்யப்படும் திருத்தம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்