யாழில் 35 வருடங்களின் பின் ஆரம்பிக்கப்பட்ட பேருந்து சேவை - மகிழ்ச்சியில் மக்கள்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) 35 வருடங்களின் பின்னர் பேருந்து சேவை ஒன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை (Kks) - பலாலி (Palaly) இடையிலான அரச பேருந்து சேவை இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது.
ஆரம்பமான பேருந்து சேவை
இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரை மாத்திரமே பயணம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட பலாலி வீதி வரை இன்றையதினம் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
அத்துடன் பேருந்து சேவை நேர அட்டவணை தொடர்பாக பின்னர் அறியத்தருவதாக இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க, மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





