கோரிக்கை விடுத்தால் பேருந்து சேவை வழங்கப்படும்!
Corona
CTB
By Chanakyan
நாடுமுழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக இன்று வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் வரும் மே 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பேருந்து சேவைகள் நடைபெறாது என இலங்கை போக்குவரத்து சபையின் உதவிப் பொது முகாமையாளர் தவானா பாண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலம் கருத்துத் தெரிவிக்கையில்,
நாளை ஒரு விடுமுறை நாளாக இருக்கும் என்றும், பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து தேவையில்லை. எனவேதான குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், அத்தியாவசிய கடமைகளைச் செய்ய வரும் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் கோரிக்கை விடுத்தால், அவர்களுக்கு பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்