ரஞ்சன் ராமநாயக்கவுக்காக ஜெனிவா பயணிக்கும் விசேட பேருந்து
Release
Geneva
Ranjan Ramanayake
Human Rights Commission
By MKkamshan
இத்தாலியில் மிலானோ நகரில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக (Ranjan Ramanayake) ஜெனிவா செல்லும் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்காக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் மனுவை சமர்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மிலானோ நகரில் எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட பேருந்தில் இவர்கள் ஜெனிவாவுக்கான பயணத்தை ஆரம்பிக்க உள்ளனர்.
ஜெனிவாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தில், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை வலியுறுத்தும் மனுவை கையளிக்க உள்ளனர்.
இதன் பின்னர் ஜெனிவாவில் இருந்த அன்றைய தினம் மாலை மீண்டும் மிலானோ திரும்பவுள்ளனர்.
தாயுமான தலைவன்…! 3 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி