இந்தியாவிலிருந்து வந்த தொழிலதிபர் கட்டுநாயக்காவில் கைது
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தை நாட்டிற்குள் கொண்டு வந்த ஒருவர் கட்டநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (02) காலை இந்தியாவின் பெங்களூரிலிருந்து 6E-1183 என்ற இண்டிகோ விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.
கைது செய்யப்பட்ட நபர் கண்டி, அக்குரணையைச் சேர்ந்த 48 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.
கொண்டுவந்த பெருமளவு வெளிநாட்டு நாணயங்கள்
அவர் தான் கொண்டு வந்த பொருட்களுடனும் உடலிலும் 48,900 யூரோக்கள், 14,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 26,650 இந்திய ரூபாய்களை மறைத்து வைத்திருந்தபோது சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பு 224,900,748 இலங்கை ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து வைத்து, இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்