மாணவர்களுக்கான 5000 ரூபாய் உதவித்தொகை குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, சிறப்பு கல்வித் தேவைகள் கொண்ட தகுதியான மாணவர்களுக்கு மாதாந்திர ரூ.5,000 உதவித்தொகை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் அடிப்படையில் இந்த உதவித்தொகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தகுதியான மாணவர்களை அடையாளம் காண்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
மாதம் ரூ. 5,000 உதவித்தொகை
அதன் அடிப்படையில் 5,530 மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்திற்கு தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதாந்திரமாக ரூ.5,000 வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், இதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறப்பு கல்வித் தேவைகள் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு நிதி ஆதரவு வழங்கப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |