புதைத்து அழிக்கப்பட்ட படுகொலை சாட்சியங்கள்: ஐ.நா ஆணையாளருக்கு பறந்த கோரிக்கை
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் உடலங்கள் புதைக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளை நீங்கள் பார்வையிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் வோல்கர் டேர்க்கிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்கள் வலையமைப்புக்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், வடக்கு கிழக்கு சமூக இயக்கங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த கடிதத்தில் தமிழ் மக்களின் பிர்ச்சினைகள், தமிழ் மக்களுக்கு சர்வதேசத்திடம் காணப்படும் கோரிக்கைகள், தமிழ் மக்களுக்கான உரிமை மற்றும் நியாமான சட்டம் என்பவை தொடர்பில் பலதரப்பட்ட விடயங்கள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
